tamilnadu

img

கேரள அரசின் கே போன் திட்டத்தை சீரழிக்க தனியார் நிறுவனங்கள் சதி

இணைய பயன்பாட்டில் இரண்டாவது இடத்தில் கேரளம் உள்ளது  - இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம்’ 2019 டிசம்பரில் வெளியிட்டுள்ள அறிக்கை

திருவனந்தபுரம், ஆக.1- கிராமப்புறங்களிலும் அதி விரைவு இணைய வசதி குறைந்த செல வில் வழங்கும் கேரள அரசின் கே போன் திட்டத்தை தகர்க்க கொள்ளை லாபம் ஈட்டிவரும் ஏகபோக நிறு வனங்கள் களமிறங்கி உள்ளன. கே போன் திட்டம் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வும் மற்றவர்களுக்கு மானிய விலை யிலும் இணைய வசதி வழங்கும் திட்ட மாகும். கேரள அரசின் அனைத்து அலு வலகங்களிலும் கே போன் இணைப்பு வழங்கப்படும். டிசம்பரில் சேவை அளிக்க உள்ள இத்திட்டம் கேரளத்தில் பெரும் வணிக மோகத்தில் உள்ள ரிலையன்ஸ் உள்ளிட்ட இணைய தொடர்பு (டேட்டா) நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்டுத்தும். எனவே குற்றச்சாட்டுகளை முன் வைத்து திட்டத்தை ஒழித்துக்கட்ட இத்தகைய நிறுவனங்களின் ஒத்து ழைப்புடன் சிலர் களமிறங்கியுள்ளனர். 

தனிமனித உரிமை

கேரளத்தில் டேட்டா சந்தையில் 90 சதவிகிதமும் ரிலையன்ஸ், வோடா போன், ஏர்டெல் நிறுவனங்களிடம் உள்ளன. கேபிள் மூலம் ஏசியா நெட்டும் ரயில் வயரும் இந்த துறை யில் உள்ளன. கே போன் திட்டத்தை விவாதத்துக்கு உட்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த நிறு வனங்கள் விரும்புகின்றன. இணைய வசதியை தனிமனித உரிமையாக இந்தியாவிலேயே முதன்முதலாக அறிவித்துள்ள மாநிலம் கேரளமா கும்.  ‘இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம்’ 2019 டிசம்பரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணைய பயன்பாட்டில் இரண்டா வது இடத்தில் கேரளம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலிடத் தில் தில்லி உள்ளது. கேரளத்தின் 4 கோடி மொபைல் இணைப்புகளில் 3 கோடிக்கு மேல் தனியார் நிறு வனங்களின் பிராட் பாண்டு இணைப்பு களாகும்.

ஏகபோகம் தகரும்

குறைந்த செலவில் தரமான இணையத் தொடர்பு வழங்கும் கே போன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கேரள சந்தையில் ஏகபோக நிறு வனங்கள் தடுமாறும். அவை தங் களை நிலை நிறுத்திக்கொள்ள கட்ட ணங்களை வெகுவாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். கேரள மாதிரியை மற்ற மாநிலங்களும் பின் பற்றினால் ஏற்படும் நெருக்கடியும் கார்ப்பரேட்டுகளுக்கு அச்சுறுத்தலா கும். கே போன் திட்டத்திற்கு ஆலோச கராக உள்ள நிறுவனத்தை முன்னி றுத்தி நடத்தப்படும் விவாதம் கார்ப்ப ரேட்டுகளுக்கு உதவுவதாகும். 52,000 கிலோமீட்டர் ஆப்டிக்கல் பைபர் இணைப்பு சங்கிலியை கே போன் ஏற் படுத்தி வருகிறது. இது அனைத்து தனி யார் நிறுவனங்களை விட பெரியது. நொடிக்கு 10 எம்பி முதல் ஒரு ஜிபி வரை வேகம் கொண்டதாகும் கே போன்.  

யுடிஎப் கால டெண்டர்

கே போன் திட்டத்தின் ஆலோசக ராக பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பேர்ஸ் நிறுவனத்தை (பி.டபிள்யு.சி) சட்டங்களை பின்பற்றாமல் தேர்வு செய்ததாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இது அடிப்படை இல்லாதது. 2012 இல் மத்திய யுபிஏ அரசு அறிவித்த அதிவிரைவு இணைய திட்டத்தை 2015 இல் கேரள அரசு அமல் படுத்த முடிவு செய்தது. அதற்கான ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை கண்டறிய கேரள மாநில தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவ னத்தின் உயர்மட்டக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. 2016 ஜனவரியில் டெண்டர் கோரப் பட்டது. டெண்டரில் அனாலிசிஸ் மாஸன், பி.டபிள்யு.சி, டெலாய்ட், ஏர்னஸ்ட் & யங் நிறுவனங்கள் பங் கேற்றன. மிக குறைந்த தொகையை குறிப்பிட்ட பி.டபிள்யு.சி தேர்வு செய்யப்பட்டது. ஆலோசகரால் பரி சீலிக்கப்பட வேண்டிய பிரச்சனை களை முடிவு செய்ததும், டெண்டர் கோரியதும் யுடிஎப்தான். எல்டிஎப் அரசு அதிகாரத்துக்கு வந்த உடன் டெண்டருக்கு அங்கீகாரம் மட்டுமே வழங்கியது.

டிராய் அறிக்கை

2020 ஏப்ரல் 30 வரையிலான இணைய பயன்பாடு குறித்த அறிக் கையை கடந்த வாரம் டிராய் வெளியிட்டது. அதன்படி கேரளத்தில் கம்பியில்லா இணைய டேட்டா வர்த்தகத்தில் 1.76 கோடிக்கு மேற் பட்ட சந்தாதாரர்களை (1,76,03,738) ‘வோடாபோன் ஐடியா’ கொண்டுள் ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு 8,990,383 சந்தாதாரர்கள் இருந்தனர். பாரதி ஏர்டெல் 55,38,046 சந்தாதா ரர்களுடன் மூன்றாம் இடத்தில் உள் ளது. கேரளத்தில் இணைய சேவை யில் முன்னணியில் உள்ள 4 தனியார் நிறுவனங்களிடம் 3,21,32,797 சந்தா தாரர்கள் உள்ளனர்.  கேபிள் மூலம் இணையத் தொடர்பு வழங்குவதில் பாரதி ஏர்டெல்லுக்கு 60,588, ரிலையன்ஸ் ஜியோவுக்கு 15,507, ரிலையன்ஸ் டாட் காம்-க்கு 9,957, வோடாபோன் ஐடியா வுக்கு 5,670 சந்தாதாரர்கள் உள்ள னர். வீடுகளுக்கும் அலுவலகங்களுக் கும் கே போன் திட்டத்தில் குறைந்த கட்டணத்தில் அதிவிரைவு இணையத் தொடர்பு வழங்கப்பட்டால் இந்த தனியார் தொலைத் தொடர்பு பகா சுர நிறுவனங்களின் கொள்ளை லாபத் துக்கு பலத்த அடியாக மாறும்.